பெரு வெள்ளத்தில் குடும்பத்தை மீட்டு நீரில் மூழ்கிய மகன்!

December 8, 2023 at 11:27 am
pc

சென்னை, பள்ளிக்கரணையில் குடும்பத்தில் உள்ளவர்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் சூழ்ந்ததால் மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அளவுக்கதிகமாக மழைநீர் சூழ்ந்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னரும் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியாததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை பள்ளிக்கரணை பகுதியில் 15 அடிக்கு வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்த பகுதியில், தனது தாய், தந்தை மற்றும் தங்கையை காப்பாற்றி மகன் அருண் என்பவர் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனையடுத்து, 3 நாட்களுக்கு பின்னர் அவரது உடல் நீரில் மிதந்து வந்துள்ளது. காணாமல் போன மகனை கண்டுபிடிக்க அதிகாரிகள் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை என குடும்பத்தினர் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website