பெற்றோர் ஒன்று சேருவதற்காக 12ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை!
ராசிபுரம் அருகே பெற்றோர் ஒன்று சேருவதற்காக 12ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சிங்களந்தாபுரத்தில் 12-ம் வகுப்பு மாணவர் தருண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெற்றோர்கள் பிரிந்து வாழ்வதால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், ‘தனது இறப்பிலாவது தாய், தந்தை ஒன்று சேர வேண்டும் என உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.