பெற்ற மகனை பெற்றோரே கூலிப்படையை வைத்து கொன்ற அதிர்ச்சி !! பரபரப்பு

தெலங்கானாவில் பெற்ற மகனை பெற்றோரே கூலிப்படையை வைத்து கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானாவை சேர்ந்த ராம்சிங் என்பவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராணி பாய். இருவருக்கும் 26 வயதில் சாய்ராம் என்ற மகன் இருந்தார். இவர் வேலைக்கு செல்லாமல் குடி பழக்கத்திற்கு அடிமையாகி பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பெற்றோர் அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தும் பயனளிக்கவில்லை. இதனால் மகனின் தொந்தரவு தாங்க முடியாத பெற்றோர் தனது உறவினர் ஒருவரது உதவியோடு மகனை கூலிப்படையை பணியமர்த்தி கொலை செய்தனர். இதற்காக அவர்கள் 6 லட்சம் வரை கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.