பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை…வேலூரில் நடந்த கொடூர சம்பவம்!

August 4, 2022 at 10:54 am
pc

வேலூர் மாவட்டம், விருபாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சங்கர் ( வயது 45) இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒருவடன் சென்றுவிட்டார். இவருக்கு 15 வயதில் மகனும்,13 வயதில் மகளும் உள்ளனர். 

இந்த நிலையில், அப்பெண் பிரசவ வலியால் துடித்ததால் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருமணமே ஆகாமல் குழந்தை பிறந்ததால் மருத்துவமனையில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து வேலூர் சமூக நலத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நேரில் சென்ற சமூக நலத்துறையினர் விசாரணை செய்ததில் அப்பெண்ணின் குழந்தைக்கு அவரின் தந்தை சங்கர் தான் காரணம் என தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் வேலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சங்கர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

பெண் குழந்தைகள் தங்களுக்கு யாரேனும் பாலியல் தொல்லை கொடுத்தால் உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்படும் நிலையில், வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெற்ற தந்தையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website