பெற்ற மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து, வாளியில் சடலத்தை மறைத்து வைத்த தாய்!! அதிர்ச்சி காரணம்…

October 6, 2022 at 7:33 pm
pc

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள சோலை அழகுபுரம்பகுதியை சேர்ந்தவர்கள் காளிமுத்து, பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு எட்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. காளிமுத்து அதே பகுதியில் தையல் கடையில் டெயிலராக வேலை பார்த்து வருகிறார். காளிமுத்துவின் மனைவி பிரியதர்ஷினி கீழவாசல் பகுதியில் ஒரு பாத்திர கடையில் வேலை செய்கிறார். 

கடந்த செப்.23ம் தேதி இரவு இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது 8 வயது சிறுமி, கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாளிக்குள் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் கடந்த சில வருடமாக காளிமுத்து அவரது மனைவி பிரியதர்ஷினியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, 2 வாரமாக தலைமறைவாக இருந்த காளிமுத்துவை, போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறை மகளிடம் சொல்லி புலம்பியதாகவும், அதற்கு மகள் நாம் சாகலாம் என தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மகளின் பேச்சை கேட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு சடலத்தை வாளியில் வைத்து விட்டு சென்றதாக தெரிவித்தார். பிறகு ரயிலில் விழுந்துசாகலாம் என புறப்பட்ட அவர், பயத்தில் சாக முடியாமல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website