பேனா சிலையை உடைப்பேன் -சீமான் ஆவேசம்!!சீமானுக்கு பெருகும் ஆதரவு…
நினைவுசின்னம் வைக்க கூடாது என சொல்லவில்லை .கடலுக்குள் வைக்காதே .உங்களுக்கு எதைப்பற்றி அக்கறை இருந்திருக்கிறது. கடற்கரையில் பகுதியில் புதைக்கவிட்டதே தவறு. பேனா வைத்தால் நன் வந்து உடைப்பேன் .அண்ணா அறிவாலயத்தில் வையுங்கள் அல்லது நினைவிடத்தில் வையுங்கள்.பள்ளிக்கூடங்களை சீரமைக்க காசு இல்லை ,மக்களே நிதி தாருங்கள் என கேட்கும் அரசுக்கு எங்கிருந்து 81 கோடி வந்தது ?
உலகப்புகழ் பெற்ற 6வது கடற்கரை சில குடும்பங்களின் புதைகுழியா?கடலுக்குள் வைக்க கூடாது.அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை தரும் .8551.13 சதுர மீட்டரை கடற்கரையில் எடுத்துக்கொண்டால் ,அங்கு மணலை கொட்ட வேண்டும். அங்குள்ள பவள பாறைகள் பாதிக்கபடும்.மீனவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆவது?சுற்றுசூழலுக்கு பாதிப்பு வரும்.அதனால் பேனா சிலையை நாங்கள் எதிர்க்கிறோம்.