பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்குள் அமைக்க கூடாது: சீமான்!பெருகும் மக்கள் ஆதரவு …

February 4, 2023 at 5:38 pm
pc

பேனா நினைவு சின்னத்தை கடலுக்குள் அமைக்க வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. 81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்து

அரசு தயாரித்துள்ள திட்ட அறிக்கையின்படி, இந்த நினைவுச் சின்னம் அமைக்கவுள்ள பகுதி கடலோர ஒழுங்காற்று மண்டலம் (CRZ IA), CRZ ll, CRZ IV-A ஆகிய பகுதிகளுக்குள் வருகிறது. இத்திட்டத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சில மீன்பிடி சங்கங்களும் எதிர்த்து வருகின்றன.

இதுகுறித்து, சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடல் எங்கள் சொத்து எந்த கொம்பனும் கைவைக்க அனுமதிக்க முடியாது. பேனா நினைவு சின்னத்தை கடலுக்குள் அமைக்கக் கூடாது. அண்ணன் சேகர் பாபு பேசியது பழைய வசனம். அதிமுக உட்கட்சி பிரச்சினைகளுக்கு நான் கருத்து கூற முடியாது. இலங்கை அகதிகள் இந்தியா வருவதை தடுக்க ஒரே வழி தனி தமிழ் ஈழம் சோசியலிசமே அது கண்டிப்பாக மலரும் என்றார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website