பேரதிர்ச்சி!! உணவு கொடுக்க தாமதமானதால் பெற்ற தாயை எரித்துக் கொன்ற கொடூர மகன்!

October 27, 2023 at 5:31 pm
pc

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் உணவு தர தாமதமானதால், இளைஞர் ஒருவர் பெற்ற தாயையே எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பட்டதாரி இளைஞர் 

நவிமும்பை அருகே உள்ள நாவ்கர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேஷ் (26). பட்டதாரியான இவர் வேலையில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தாய் சங்குனாவிடம் சாப்பாடு கேட்டுள்ளார் ஜெயேஷ். ஆனால், உணவு கொடுக்க தாமதமானதாக தெரிகிறது

இதனால் ஆத்திரமடைந்த ஜெயேஷ், தாயிடம் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் உச்சிக்கு சென்ற அவர் கம்பால் அடித்ததுடன், வீட்டைவிட்டு வெளியே இழுத்து அரிவாளால் தாக்கியுள்ளார். 

தாயை தீயிட்டு கொழுத்திய மகன் 

அதன் பின்னர் சங்குனா மீது காய்ந்த இலைகள், புற்களை போட்டு தீயிட்டுள்ளார். உடலில் தீப்பற்றியதால் சங்குனா அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சங்குனாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில் தப்பியோடிய ஜெயேஷ் பொலிஸாரிடம் பிடிபட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயை மகனே எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.      

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website