பேரதிர்ச்சி !!8 ம் வகுப்பு சிறுமியை பலமுறை பலாத்காரம்…. மூளையிலிருந்து ரத்த கசிவு ஏற்பட்டு பலியான சோகம் …
கேரளாவின் திருவனந்தபுரத்தில், வீட்டில் மர்மமான முறையில் இறந்த 8 ஆம் வகுப்பு சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், மூளையில் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், அதுவே அவரது மரணத்திற்குக் காரணம் என்றும் தெரியவந்துள்ளது. சிறுமி இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட வற்புறுத்தப்பட்டதாகவும், இதன் விளைவாக அவரது உடலில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுமி மார்ச் 30 அன்று குளியலறையில் தலையில் காயம் மற்றும் மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறி இறந்து கிடந்தார்.