பொங்கல் தினத்தில் ஒரு கிராமமே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைந்த ஆச்சரியம்!சீமான் உருவம் பதித்த உடைகள்…

January 17, 2023 at 8:23 pm
pc

தமிழகத்தில் உள்ள ஒரு கிராமமே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைந்தது மற்ற அரசியல் கட்சிகளுக்கு கிலியை கொடுத்துள்ளது.

நாம் தமிழரில் இணைந்த கிராம மக்கள்

மயிலாடுதுறை தொகுதியில் உள்ளது ஊர்குடி என்ற கிராமம். இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொங்கல் திருநாளான நேற்று முன் தினம் தங்கள் குடும்பத்தோடு தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

அங்கு நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற வேண்டும் என்று இந்த ஊர் இளைஞர்கள் சிலர் ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்குள்ள மற்ற இளைஞர்கள், தங்களையும் நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொள்ள முன்வந்தனர்.

சீமான் உருவம் பதித்த உடைகள்

இளைஞர்கள் அனைவரும் சேர்வதை பார்த்ததும் ஊரில் உள்ள பெண்கள் உள்ளிட்ட பெரியவர்களும் தங்களையும் நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் தலைமையில் அங்குள்ள 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீமானின் உருவம் பதித்த உடைகளை அணிந்துகொண்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளனர். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website