பொன்னியின் செல்வன் தெலுங்கர் படம் என்ற சுஹாசினி: ப்ளூ சட்டை என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

September 27, 2022 at 11:14 am
pc

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இதையடுத்து பல முக்கிய நகரங்களுக்கு சென்று படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திராவில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஹாசினி மணிரத்னம் பேசியது சர்ச்சையாகிவிட்டது.

சுஹாசினி

ஆந்திரா நிகழ்ச்சியில் சுஹாசினி கூறியதாவது, பொன்னியின் செல்வன் உங்களின் படம். இது தமிழ் படம் என்றாலும் பெரும்பாலான காட்சிகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஷூட் செய்யப்பட்டது. தமிழகத்தில் அதிகபட்சமாக 10 நாட்கள் தான் ஷூட்டிங் நடந்தது. புதுச்சேரி, பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடந்தது. மீதமுள்ள காட்சிகள் ராஜமுந்திரி மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. அதனால் இது உங்களின் படம். நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.

விளாசல்

ஒரு தமிழ் படத்தை போய் இப்படி தெலுங்கு படம் என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம் தெரியுமா?. இது தான் மோசமான விளம்பர யுக்தி. அவ்வளவு ஆசை இருந்தால் பொன்னியின் செல்வனை தெலுங்கில் மட்டும் எடுத்து ரிலீஸ் செய்திருக்க வேண்டியது தானே என சுஹாசினியை சமூக வலைதளங்களில் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

ப்ளூ சட்டை மாறன்

சுஹாசினி பேசிய வீடியோவை வெளியிட்டு ப்ளூ சட்டை மாறன் கூறியிருப்பதாவது, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்தான் அதிகம் நடந்துள்ளது. ஆகவே இது தெலுங்கு மக்களின் படம். இப்படத்தை நீங்கள்தான் வெற்றியடை செய்ய வேண்டும் – Suhashini at PS 1 Promo event in Andhra என்றார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website