போதைப் பொருள் விற்பனை: 504 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்.!
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிகழாண்டு தற்போது வரை, ஒரு கிலோவுக்கு மேல் போதைப் பொருள் கைப்பற்றிய வழக்குகளில் 1,351 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 908 பேரின் சொத்து மற்றும் வங்கிக் கணக்குகள் விவரங்களை சேகரித்து அவற்றை சட்ட ரீதியாக முடக்கும் பணி நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 504 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 34 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.