போதையில் ஆசனவாயில் டம்ளரை சொருகிய நண்பர்கள்.. பகீர் சம்பவம்!
குஜராத்தின் சூரத்தில் பணிபுரியும் க்ருஷ்னா ரௌத்(45), 10 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் பார்ட்டியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, போதையில் இருந்த நண்பர்கள் அவரது ஆசனவாயில் கண்ணாடி டம்ளரை சொருகியுள்ளனர். இதனால் வலியால் அவதிப்பட்ட க்ருஷ்னா ரௌத் இதை யாரிடமும் சொல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டு, அவரால் மலம் கழிக்க முடியவில்லை. பின்னர் அவர் பெர்ஹாம்பூர் நகரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதலில் ஆசனவாய் வழியாக டம்ளரை எடுக்க முயன்றனர். இருப்பினும், அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்ததால், அறுவை சிகிச்சை மூலம் டம்ளரை வெளியே எடுத்தனர். தற்போது க்ருஷ்னா ரௌத் குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.