போலி கருத்தரிப்பு மையங்கள்-தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

October 4, 2022 at 1:16 pm
pc

ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் படி, கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், கருத்தரிப்பு மையங்கள், வாடகை தாய் மையம் என நான்கு வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாயும், கருப்பையில் செலுத்த 50 ஆயிரம் ரூபாயும், வாடகை தாய் மையத்துக்கு இரண்டு லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். 

எனவே பதிவு கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம். இதன் மூலம் போலி கருத்தரிப்பு மையங்கள் செயல்படாமல் தடுக்க முடியும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website