ப்ளுசட்டை மாறனுக்கு செருப்பு மாலை போட்டு செருப்படி… பார்த்திபன் ரசிகர்கள் ஆவேசம்!
பார்த்திபனின் ரசிகர்கள் ப்ளு சட்டை மாறனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை போட்டு செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்த்திபன்
தமிழ் நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் பார்த்திபன். வழக்கமான படங்களை போன்று அல்லாமல் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அவரது இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்தில் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் கொண்டு அப்ளாஸை அள்ளினார்.
இரவின் நிழல்
அந்தப் படம் உலகளவில் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இரவின் நிழல் படத்தை இயக்கியிருந்தார். ஒரே ஷாட்டில் பெரும் முயற்சிக்கு பிறகு இந்தப் படம் காட்சியாக்கப்பட்டது. இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ப்ளூ சட்டை மாறன்
இந்நிலையில் இரவின் நிழல் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் செய்த விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட விமர்சனத்தில் அதாவது படத்தை ஒரே ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள். படத்திற்கு முன்பு மேக்கிங் வீடியோ என்று அரை மணிநேரம் காண்பித்திருக்கிறார்கள்.
கடும் விமர்சனம்
பார்த்திபன் இதை உலகிலேயே நான்லீனியர் படம் என்று சொன்னார். ஆனால், ஏற்கனவே 2013 இல் ஈரானில் fish & cat என்ற படம் வந்து விட்டது. அதனால் இதை உலகிலேயே, தமிழகத்திலேயே, சினிமாவிலேயே என்று சொல்வதெல்லாம் தேவையில்லாத ஒன்று. ஒரு இயக்குனர் ஒரு நல்ல படத்தைக் கொடுத்தால் போதும். அதற்கு இந்த மாதிரி எல்லாம் சொல்வது அர்த்தமற்ற ஒன்று என விளாசினார்.
அவரது இந்த விமர்சனத்திற்கு நடிகர் பார்த்திபனும் பதில் அளித்திருந்தார். படம் பார்க்க அழைத்த போதே இதை தன்னிடம் கூறியிருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் ப்ளுசட்டை மாறன். இந்நிலையில் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் இரவின் நிழல் படத்தை பார்த்த புதுச்சேரி நடிகர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பார்த்திபன் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து அதனை செருப்பால் அடித்ததோடு தீயிட்டு கொளுத்தியும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், ப்ளூ சட்டை மாறனுக்கு செருப்புமாலை போட்டு தரமான செருப்படி சம்பவம் செய்த பார்த்திபன் ரசிகர்கள். புதுமையான பாராட்டிற்கு நன்றி பார்த்திபன் சார். உங்கள் நாகரீக செயல் தொடரட்டும்.. என குறிப்பிட்டுள்ளார்.