மகன்களுக்காக ஒன்றிணைந்த தனுஷ் – ஐஷ்வர்யா! வைரல் புகைப்படம் ….
யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு பிரிவிற்கு பின்னர் முதல் முறையாக தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒன்றாக வந்தனர்.
நடிகர் தனுஷும், அவர் மனைவி ஐஸ்வர்யாவும் பிரிவதாக இந்தாண்டு ஜனவரி மாதத்தில் அறிவித்தனர்.
இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகன் யாத்ராவுக்காக, தனுஷும், ஐஸ்வர்யாவும் தற்போது இணைந்துள்ளனர்.
ஆம்! இருவரும் பிரிவதாக அறிவித்த பிறகு மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு முதல் முறையாக ஒன்றாக வந்தனர். இந்த நிகழ்ச்சியில் தனுஷின் நெருங்கிய நண்பரான பாடகர் விஜய் யேசுதாசும் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.