மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் காதலனின் தாயை வெட்டி கொன்ற காதலியின் தந்தை!!
மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் காதலனின் தாயை வெட்டி கொன்ற காதலியின் தந்தையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள கிழக்கு அபிராமம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாயிரம். இவரது மகள் காவியா (வயது 20), அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வினித்தை (வயது 24) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் அண்மையில் திருமணம் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, இரண்டு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண்ணின் தந்தை கண்ணாயிரம் என்பவர் ஆத்திரத்தில் வினித் என்பவரின் தாய் ராக்கை (வயது 53) சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து கொலை செய்த கண்ணாயிரத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.