மக்களே உஷார்!! எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க ..ஆபாச படம் பார்த்தவர்களுக்கு நேர்ந்த கதி…

August 22, 2022 at 2:36 pm
pc

டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவர் விஷ்வா, ஆபாச ‘வெப் சீரிஸ்’ பார்த்துக்கொண்டிருந்தபோது, “ஆபாச படத்தை பார்ப்பது சட்டவிரோதமானது. நீங்கள் உடனடியாக ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தவேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டும்” என்று கணினியின் திரையில் எச்சரிக்கை வந்தது. மேலும் ‘அபராதம்’ செலுத்துவதற்கான ‘யூ.பி.ஐ.’ ‘பேமெண்ட்’ மற்றும் ‘கியூ.ஆர்.’ குறியீடு விவரங்களும் அதில் இருந்தன. விஷ்வாவுக்கு லேசாக சந்தேகம் ஏற்படவே அந்த இணைய முகவரியை சரிபார்த்து, அது போலி என்பதை கண்டுபிடித்தார். 

இதேபோன்ற அனுபவம் அவரது நண்பர்களுக்கும் ஏற்பட்டதால், அவர்கள் கூட்டாக சேர்ந்து ‘சைபர்’ கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இந்த புகாரை விசாரித்த போலீசார், கம்போடியாவை தலைமையகமாகக்கொண்டு செயல்படும் ஒரு ‘சைபர்’ கிரிமினல் கும்பலின் வேலை இது என்பதை கண்டறிந்தனர். கடந்த 6 மாதங்களில் நாடு முழுவதும் உள்ள பலரிடம் இருந்து ஏராளமான பணத்தை இந்த கும்பல் கொள்ளையடித்திருந்ததை கண்டறிந்தனர். இந்நிலையில் போலீசார் இது போன்று போலியான எச்சரிக்கையிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website