மக்களே உஷார்!! ஐஸ்கிரீமில் தவளை: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

February 6, 2023 at 1:24 pm
pc

மதுரை திருப்பரங்குன்றம் டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் ஜானகி. இவர் நேற்று சுப்ரமணியசாமி கோவிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்துள்ளார். பின்னர் அப்பகுதி ஜிகர்தண்டா கடையில், அவரது அத்தை மீனா, ஐஸ்கிரீம் வாங்கி ஜானகி மகளான மித்ரா ஸ்ரீ (8), ரக்ஷனா ஸ்ரீ (7), உறவினர் மகள் தாரணி ஸ்ரீ (3) ஆகியோருக்கு கொடுத்துள்ளார். அதை குழந்தைகள் சாப்பிட்டனர். அதில் ஒருவரின் கோன் ஐஸ்கிரீமில் சிறிய இறந்த தவளை இருந்துள்ளது. சிறிது நேரத்தில் மூவருக்கும் வாந்தி ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website