மக்களே உஷார் !!ஓட்டலில் வாங்கிய பீட்ரூட் பொரியலில் எலித் தலை- அதிர்ச்சி!

September 12, 2022 at 10:47 am
pc

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் துக்க நிகழ்வுக்கு வாங்கிச் சென்ற சாப்பாட்டில் எலி தலை இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பாலாஜி பவன் என்ற சைவ உணவகத்தில் சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த ஓட்டலில் இருந்து அனுப்பப்பட்ட சாப்பாட்டில் பீட்ரூட் பொரியலில் எலித் தலை இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஒட்டலில் முறையிட்ட போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமரசம் செய்து அந்த உணவை உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website