மக்களே உஷார் !!சளி மாத்திரை சாப்பிட்ட சிறுவன் பரிதாப பலி!

October 20, 2022 at 2:05 pm
pc

சளிக்கு மாத்திரை சாப்பிட்ட மாணவன் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கொளத்தூர் பகவதி அம்மன் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி ஜெயப்பிரதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தீபக் 1),  பெரியார் நகர் பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். 

நேற்று முன்தினம் சிறுவனுக்கு இரவு லேசான சளி இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று  பாதி மாத்திரையை ராஜ்குமார் சிறுவனுக்கு கொடுத்துள்ளார். சிறிது நேரத்திலே சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

தனது ஆட்டோவில் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றார். செல்லும் வழியில் சிறுவன் மயக்கம் அடைந்தான். பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுவனை காண்பித்தபோது சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

சளி பிரச்னைக்கு மாத்திரை சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website