மக்களே எச்சரிக்கை! பரவும் மஞ்சள் காமாலை நோய்!

May 12, 2022 at 4:56 pm
pc

தூத்துக்குடியில் அதிக அளவில் மஞ்சள் காமாலை நோய் பரவி வருவதால் அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எம்.கே தெரு, குமார் தெரு, பங்களா தெரு, தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானவர்களுக்கு தற்போது மஞ்சகாமாலை நோய் பரவி வருகிறது.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவின் பேரில் இந்த பகுதியில் சுகாதார துறையினர் சிறப்பு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மாநகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் அருண்குமார் தலைமையில் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனரா என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி நடத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மருத்துவர் இமானுவேல் டைஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்து, தேவையான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்கள் தண்ணீரை சுட வைத்து குடிக்க வேண்டும் மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website