மக்களே எச்சரிக்கை !! புதிய வகை வைரஸ்… குழந்தைகளை மட்டும் பாதிக்கும் ..தக்காளி காய்ச்சல் .!!

May 8, 2022 at 3:39 pm
pc

புதிய வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழகத்திற்கு புதிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், உடல் வலி, கை கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட பல அறிகுறிகளுடன் இந்த வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை குறிவைத்து தாக்கி வருகிறது. இதற்கு தக்காளி காய்ச்சல் என பெயரிடப்பட்டு உள்ளது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதால், பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 85 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக, கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது:
கேரளாவில் பரவி உள்ள தக்காளி வைரஸ் பற்றி அம்மாநில அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டு உள்ளது. அண்டை மாநிலங்களில் வைரஸ் பற்றி கேட்டு, ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்ற முறையில் சிகிச்சைகள் பற்றி கேட்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

மேலும் தக்காளி வைரஸ் என்பது ஏற்கனவே சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் ஒரு புதிய வகை தொற்றாகும். நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுவினால் இது பரவுகிறது. தோலில் சிவப்பு நிற புள்ளிகள் தென்படுவதால் இதற்கு தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளது. தக்காளி வைரஸுக்கும், தக்காளிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எந்தவகை நோய்த் தொற்று வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக மருத்துவத்துறை தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 

இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், நேற்று முன்தினம் 58 ஆக இருந்த கொரோனா தினசரி பாதிப்பு, நேற்று 89 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website