மக்காச்சோளத்துல பட்டு மாதிரி இருக்கற தோகையை தூக்கி வீசாதீங்க… டீ போட்டு குடிச்சா இவ்ளோ நன்மையும் கிடைக்கும்..!!

March 6, 2023 at 6:34 am
pc

மக்காச்சோளத்தை வேகவைத்தோ, சுட்டோ சாப்பிடுவதற்கு எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ்களில் ஒன்று. ஆனால் அந்த மக்காச்சோளத்தை வேகவைக்கும்முன் அதில் உள்ள பட்டு போன்ற மென்மையான தோகையை தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த தோகையில் டீ வைத்து குடிக்கலாம். இந்த டீயை குடித்து வந்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.


மக்காச்சோளம் சாப்பிடுவதற்கு மிக மென்மையான, அதேசமயம் சுவையான ஸ்நாக்ஸ்ம் கூட. அவற்றில் கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதேபோல அதனுடைய மென்மையான தோகையிலும் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதில் எப்படி டீ தயாரித்து குடிக்கலாம், என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.


மக்காச்சோள தோகையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :


மக்காச்சோளம் சாப்பிடுவதற்கு மிக மென்மையான, அதேசமயம் சுவையான ஸ்நாக்ஸ்ம் கூட. அவற்றில் கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதேபோல அதனுடைய மென்மையான தோகையிலும் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதில் எப்படி டீ தயாரித்து குடிக்கலாம், என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.


மக்காச்சோள தோகையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :


மக்காச்சோள தோகையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, வைட்டமின் ஏ, பி2, சி, ஈ, மற்றும் கே ஆகியவை நிறைந்திருக்கின்றன.
அதோடு கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட மினரல்களும் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகளும் நிறைந்திருக்கின்றன.


உடல் கழிவுகள் வெளியேற :


மக்காச்சோளத்தில் உள்ள பட்டு போன்ற இந்த மென்மையான தோகையைப் பயன்படுத்தி டீ செய்து குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் வெளியேறும்.
உடலை டீ டாக்ஸ் செய்ய நினைப்பவர்கள் இந்த டீயை தினமும் அரை கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம் அல்லது வாரத்தில் இரண்டு நாட்களாவது எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க :
சர்க்கரை நோய் உள்ளவர்களும் தினமும் ஒரு முறை இந்த டீயை அருந்தலாம்.
இந்த தேநீர் உடலில் இன்சுலின் சுரப்பைத் தூண்டி ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.


சிறுநீரகத்தை பாதுகாக்க :


சிறுநீரகத்தை சுத்தம் செய்யவும் இந்த மக்காளச்சோள சோகை டீ உதவ செய்யும். அதோடு சிறுநீரகக் கற்களை உண்டாக்கும் அபாயயத்தைக் குறைக்கும்.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த டீ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த டீயில் குடிப்பதால் உடலில் சேரும் நைட்ரேட்டும் வெளியேற்றப்பட்டு, சிறுநீரக கற்கள் பிரச்சனையைத் தவிர்க்கிறது.


இரத்த அழுத்தத்த குறைக்க :


கார்ன் சோகையில் செய்யப்படும் டீ அதிகமாக சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. அதில் உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றும்.
உடலில் உள்ள அதிகப்படியான சோடியம் வெளியேறும்போது உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். அது ரத்தத்தின் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்கிறது.


ஆன்டி – இன்பிளமேட்டரி பண்புகள் :


மக்காச்சோளத்தில் உள்ள அந்த பட்ட போன்ற தோகையில் நிறைய ஊட்டச்சத்துக்களும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் நிறைந்திருக்கின்றன என்பது நமக்குத் தெரியாது.
இதிலுள்ள ஆன்டி இன்பிளமேஷன் பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கங்கள் மற்றும் தொற்றுக்களுக்கு எதிராகப் போராடி நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.


கார்ன் டீ தயாரிப்பது எப்படி?


அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
தண்ணீர் நன்றாகக் கொதித்து வரும்போது அதில் மக்காச்சோளத்தில் உள்ளே இருக்கும் பட்டு போன்ற அந்த முடியைப் போட்டுக் கொதிக்க விடுங்கள்.
நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அப்படியே மூடி வைத்துவிடுங்கள்.
பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் அதில் எலுமிச்சை சாறு சேர்த்தால் டீ தயார்.
இந்த டீயை ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம். குடிக்கும்போது மட்டும் லேசாக சூடேற்றிக் கொள்ளுங்கள்.


இந்த டீ குடிக்கும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் :


உடலுக்கு நிறைய ஆரோக்கியம் என்பதற்காக இந்த டீயை அதிகமாகக் குடிக்கக்கூடாது. மருந்து எடுத்துக் கொள்வதைப் போல ஒரு நாளைக்கு ஒரு முறை கால் கப் அளவுக்கு குடிக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த டீயை குடிக்கக் கூடாது.


இந்த டீ குடிக்கும்போது சிறுநீர் அதிகமாகப் பிரியும். ஒருவேளை அளவுக்கு அதிகமாக சிறுநீர் பிரிந்தால் உடனடியாக இந்த டீ குடிப்பதை நிறுத்திவிடுங்கள். ஏனெனில் தொடர்ந்து குடித்து சிறுநீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கும்போது உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து கொண்டே போகும். அதனால் கார்ன் டீ குடிக்கும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website