மணமணக்கும் மசாலா பணியாரம் நொடியில் செய்து எல்லோரையும் அசத்துங்க ….!
தேவையானவை:
இட்லி மாவு அல்லது தோசை மாவு – 3 கப்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கேரட் – 2 (துருவவும்)
பீன்ஸ் – 10 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெயைவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு கேரட் துருவல், பீன்ஸ், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி வேகவிடவும்.
இறுதியாக தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவி, கிளறி இறக்கவும். ஆறியதும் இதை இட்லி/தோசை மாவில் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்துச் சிறிதளவு எண்ணெய்விட்டு மாவைக் குழிகளில் நிரப்பி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: மிளகாய்த்தூளுக்குப் பதிலாகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கலாம்.