மணிப்பூரில் மேலும் ஒரு கொடூரம்!

July 22, 2023 at 9:14 pm
pc

இந்திய மாகாணம் மணிப்பூரில் பற்றியெரியும் கலவரத்தினிடையே, பெண்கள் இருவர் சீரழிக்கப்பட்டு, நிர்வாண ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில், இன்னொரு கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மணிப்பூரில் நெஞ்சை உலுக்கும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளதாக ஆளும் பாஜக முதலமைச்சர் பைரேன் சிங் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மணிப்பூரில் இன்னும் ஒரு மிருகத்தனமான சம்பவம் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மே 4ம் திகதி இம்பால் நகரில் கார் கழுவும் பணியாளர்கள் குழுவிலிருந்து இருபது வயதுடைய இரண்டு குக்கி பெண்கள் வன்முறை குழுவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே 16ம் திகதி, பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. 21 மற்றும் 24 வயதுடைய இரு பெண்களும் பணியிடத்தில் ஒளிந்திருந்த நிலையில், கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தி, வன்கொடுமைக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மே 4ம் திகதி, கலவரம் மூண்டதன் அடுத்த நாள், பெண்கள் இருவர் நிர்வாண கோலத்தில் தெருவில் ஊர்வலம் நடத்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது இளம் பெண்கள் இருவர் தொடர்பில் வழக்கு பதிந்தும், இதுவரை முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறுகின்றனர். மேலும், சம்பவத்தன்று பெரும் திரளான Meitei இன ஆண் பெண் உள்ளிட்ட மக்கள் அந்த கார் கழுவும் நிறுவனத்தை முற்றுகையிட்டு,

குக்கி இன பெண்கள் இருவரையும் கொடூரமாக தாக்கி, Meitei இன பெண்கள் முன்னிலையில் சீரழிக்கப்பட்டு, சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் அந்த வன்முறை குழுவினர் அப்பகுதியில் இருந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இதன் பின்னர், குறித்த பெண்களின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். ஆனால், அதன் பின்னர் பொலிஸ் தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தொடர்புகொள்ளவில்லை என்றே கூறப்படுகிரது.

இவர்களின் கிராமம் மொத்தமாக தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த இரு பெண்களின் குடும்பத்தினர் முகாம் ஒன்றில் தங்கியுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website