மணிப்பூருக்கு பிரதமர் மோடி வர வேண்டும்!
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் இன்று மணிப்பூர் சென்றார். தற்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மணிப்பூர் முதல்வர் பீரன் சிங்கை நேரில் சந்திக்க இருப்பதாகவும், வன்கொடுமைக்கு ஆளான பெண்களை சந்தித்து, அவர்களுக்கு சட்ட உதவி மற்றும் நிவாரணம் கிடைக்கப்பெற்றதா? என்பதை அறிய விரும்புகிறேன் என கூறியுள்ளார். மேலும், இங்கே அரசியல்செய்ய விரும்பவில்லை என்றும், பிரதமர் மோடி வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.