மதம் மாற்றி காதல்: தங்கையை கழுத்தை துண்டித்து கொலை செய்த அண்ணன்

July 22, 2023 at 8:40 pm
pc

வேறு மதத்தினரை காதலித்ததால் தனது தங்கையின் கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கழுத்தை வெட்டிய சகோதரர்

இந்திய மாநிலம், உத்தர பிரதேசத்தில் ஃபதேபூர் பகுதியில் உள்ள மித்வாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரியாஸ்(22). அவரது சகோதரி ஆஷிபா (18). ஆஷிபாவும் அதை பகுதியைச் சேர்ந்த சந்த் பாபுவும் காதலித்து வந்தனர்.

ஆஷிபா காதலித்து வந்த சந்த் பாபு வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதார் காதலை கைவிடுமாறு ரியாஸ் கூறியுள்ளார். ஆனால், அதனை ஆஷிபா மறுத்துள்ளார். இதனால் ரியாஸ் மற்றும் அவரது சகோதரி ஆஷிபா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்ந்துள்ளது.

பின், ஆத்திரத்தில் தனது தங்கையை கொலை செய்ய முடிவு செய்து, அரிவாளை வைத்து தலையை வெட்டினார்.

தலையுடன் காவல்நிலையம் சென்ற அண்ணன்

இதனையடுத்து, தனது சகோதரியின் துண்டிக்கப்பட்ட தலையை ஒரு பையில் போட்டுக் கொண்டு காவல் நிலையத்திற்கு ரியாஸ் ஊர்வலமாக சென்றுள்ளார். இதுகுறித்து, அருகில் இருந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் தகவல் அளித்தனர். 

பின், துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்த போதே ரியாஸை ​​பொலிசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர். தனது தங்கை காதலித்து எனக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் கொலை செய்தேன் என்றும் ரியாஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

தங்கையின் கழுத்தை அண்ணனே வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website