மத்திய பிரதேசத்தில் மற்றுமொரு கொடூரம்!
பழங்குடியினர் முகத்தில் சிறுநீர் கழித்த சம்பவத்தை அடுத்து, மத்திய பிரதேசத்திலேயே மற்றொரு கொடூர காட்சி வெளியாகியுள்ளது. இளைஞரை கொடூரமாக தாக்கி, கட்டாயப்படுத்தி கால்களை நக்கச்செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
குவாலியரில், ஓடும் வாகனத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தாக்குதல் நடத்தியவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் குவாலியர் மாவட்டத்தில் உள்ள டப்ரா நகரைச் சேர்ந்தவர்கள் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அந்த வீடியோவில், வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரை, மற்றொரு நபர் கொடூரமாக தாக்குவதையும், ‘கோலு குர்ஜார் பாப் ஹா’ என்று சொல்லும்படி கட்டாயப்படுத்துவதையும் காணலாம். பின்னர் அவரது காலை நக்கும்படி வற்புறுத்தி, பின்னர் செருப்பால் அடித்துள்ளனர்.
அந்த வீடியோவில் அந்த இளைஞன் தாக்கியவரின் கால்களை நக்குவதையும் காணலாம். இளைஞன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு முகம் மற்றும் தலையில் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். வீடியோ கிளிப் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டப்ரா துணைப் பிரிவு அதிகாரி தெரிவித்தார்.