மந்திரவாதி சொல்லை கேட்டு சிறுமியை கற்பழித்த ஆசிரியர்!அதிர்ச்சி தகவல்

November 2, 2022 at 1:22 pm
pc

மேற்கு வங்க மாநிலத்தில் பங்குரா என்ற பகுதியில் இயங்கி வருகிறது தனியார் பள்ளி. இப்பள்ளியில் 37 வயது ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் தனக்கு திருமணமாக வேண்டும் என்பதற்காக கோயில் கோவிலாக அலைந்துள்ளார். இந்நிலையில், ஒரு சாமியாரிடம் ஜாதகம், ஜோதிடம் பார்த்து வந்திருக்கிறார். 37 வயதான ஆசிரியருக்கு திருமண தடை நீங்க வேண்டும் என்றால், கன்னிப் பெண்ணின் அந்தரங்க உறுப்பின் ரத்தம் வேண்டும் என்று மந்திரவாதி கேட்டுள்ளார். இதனால், அந்த ஆசிரியர், அப்பள்ளியில் படிக்கும் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்த அதிர்ச்சி தகவலை கேட்டு சிறுமியின் பெற்றோர் மட்டும் அல்லாது போலீசாரே திகைத்து போயினர். இதையடுத்து, பள்ளியின் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website