மனஅமைதி தேவை -11 ஆண்டுகால மணவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த GV பிரகாஷ் – சைந்தவி ஜோடி

May 14, 2024 at 11:02 am
pc

தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான GV பிரகாஷ் குமார் மற்றும் அவரது மனைவி பாடகி சைந்தவி திருமணமான 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்ததாக நேற்று அறிவித்துள்ளனர்.

மணவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த GV பிரகாஷ்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பின்னணிப் பாடகி சைந்தவி இருவரும் தங்களது 11 ஆண்டுகால மணவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

மணவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த GV பிரகாஷ்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பின்னணிப் பாடகி சைந்தவி இருவரும் தங்களது 11 ஆண்டுகால மணவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.GV பிரகாஷும் சைந்தவியும் அவர்களுடைய சமூக ஊடகப் பக்கங்களில் அறிக்கைகளை பதிவேற்றி அறிவித்திருந்தார்கள்.

நன்கு யோசித்து தான் முடிவெடுத்துள்ளோம் என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகாலம் முதலே காதலித்து வந்த GV பிரகாஷ் – சைந்தவி இருவரும் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

இவருடைய இசையில் ‘எள்ளுவய பூக்கலையே’, ‘பிறைதேடும் இரவிலே’, ‘கையிலே ஆகாசம்’ போன்ற பல பாடல்களையும் சைந்தவி பாடியிருந்தார்.

இந்நிலையில் இவர்களின் அறிவிப்பு பல ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website