மனித உயிர்களை காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி! கணவன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் மனைவி தற்கொலை…

September 25, 2022 at 7:24 pm
pc

சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ஞானசெல்வன் மனைவி வகித்தாபுளோரா. இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது. கணவன் ஞானசெல்வன் ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.1000 பணத்தை இழந்ததாக கூறப்படுகின்றது. இதனை அறிந்த வகித்தா கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் ஞானசெல்வன் கதறி அழுதார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த வகித்தா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website