மனைவியை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற 65 வயது கணவன்..!

April 22, 2023 at 2:27 pm
pc

திருவள்ளூர் அருகே இரவு உணவு கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். 

பொன்னேரி அடுத்த மடிமை கண்டிகையை சேர்ந்தவர் 65 வயதான முதியவர் ரவி. இவரின் மனைவி ஜோதி. முதியவரான ரவி, செவித்திறன் மற்றும் பேச்சுத்திறனற்ற மாற்றுத்திறனாளியான நிலையில், கடந்த 5 வருடங்களாக மன நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று கணவன், மனைவிக்கிடையே இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில், ரவியை அவரது மனைவி தாக்கியதோடு, இரவு உணவு வழங்க மறுத்து தூங்க சென்றதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், ஆத்திரமடைந்த ரவி, தூங்கி கொண்டிருந்த மனைவியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மன நலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளியான ரவியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website