மனைவியை கழுத்து அறுத்து கொன்ற கணவன்… அதிர வைத்த அலறல் சத்தம்!

September 17, 2022 at 12:16 pm
pc

போளூர் அருகே நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் போலீசின் சரண் அடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தை வசிப்பவர் சுரேஷ் (வயது 36) சொந்தமாக கார் வைத்து வாடகை சவாரி செய்வது வழக்கம் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். 

இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 30) இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது மகளும் நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது மகனும் உள்ளனர். இந்த நிலையில் பச்சையம்மாள் நடத்தையில் சுரேஷ்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கணவனிடம் சண்டை போட்டுவிட்டு பச்சையம்மாள் குரால் பாக்கம் கிராமத்தில் உள்ள தனது அத்தை சாவித்திரி வீட்டில் சென்று தங்கி இருந்தார். நேற்று காலை 10 மணி அளவில் குரால் பாக்கம் கிராமத்திற்கு சுரேஷ் சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி பச்சையம்மாளின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து சுரேஷ் போளூர் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். 

போலீசார் சென்று பச்சையம்மாள் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website