மனைவி என நினைத்து அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கத்தியால் தொண்டை பகுதியில் சரமாரியாக குத்தி கொலை!!

May 21, 2022 at 1:01 pm
pc

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (38). இவரது கணவர் சுரேஷ் இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்த பின்னர் இவருடைய இரண்டு குழந்தைகளையும் வாணியம்பாடியில் உள்ள அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு தனலட்சுமி ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சில பெண்களுடன் சென்று தினமும் பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவருக்கும் தனலட்சுமிக்கும் தொடர்பு ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த 2 மாதங்களாக திருவண்ணாமலையில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும்,அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று ஆம்பூரில் இருந்த மனைவி தனலட்சுமியை தேவேந்திரன் குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால், இதற்கு தனலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன் நேதாஜி ரோடு பகுதியில் சாலையோரம் ஒரு கடையின் வளாகத்தில் தனலட்சுமி சில பெண்களுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது மனைவி என நினைத்து கத்தியால் தொண்டை பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கம்பிகொல்லை பகுதியை சேர்ந்த கௌசர் (27) 
என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை தடுக்கச் சென்ற தனலட்சுமியையும் தேவேந்திரன் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மனைவி என நினைத்து அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website