மரணப்படுக்கையில் இருக்கும் மனைவியின் விபரீத கடைசி ஆசை! அதிர்ந்துபோன கணவன்
சமூக வலைதளத்தில் நபர் ஒருவர் தனது மனைவியின் கடைசி ஆசையை கேட்டு அதிர்ந்துபோனதை பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.
மரணத்தை எதிர்நோக்கும் மனைவி
ரெடிட் எனும் சமூக வலைதளத்தில் நபர் ஒருவர் தனது மனைவி 9 மாதங்களில் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறியதாக பதிவிட்டுள்ளார்.
தன் மனைவி மரணப்படுக்கையில் இருக்கும் நிலையில், அவர் தன்னிடம் இறுதி ஆசையை கேட்டுள்ளார். அதனைக் கேட்டு அவர் அதிர்ந்துள்ளார்.
அதாவது, முன்னாள் கணவருடன் ஒருமுறை உடலுறவு கொள்ள வேண்டும், அதுதான் எனது இறுதி ஆசை என்றும், அவருடன் தான் தனது உடலுறவு முழுமை பெற்றது என்றும் அவரது மனைவி கூறியிருக்கிறார்.
தன் மனைவியின் இந்த ஆசை தன்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனை நிறைவேற்றிக் கொடுக்க தனது மனம் ஒப்புக்கொள்ளவில்லை, கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்த தனக்கு நெருடலைக் கொடுத்தது என்றும் அந்நபர் தனது மனநிலையை வெளிப்படுத்தினார்.
கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்
குறித்த நபரின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அவர்களில் சிலர் குறித்த நபர் தன் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றும், இது உண்மையாக இருந்தால், அவரது கடைசி மாதங்களை முழுமையாக வாழ்ந்து, நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் , இறக்க சொல்லுங்கள் என்றும் பரிந்துரை செய்துள்ளனர்.