மருத்துவர் விசாரணைக்கு ஷர்மிகா ஆஜர்..
சென்னை, அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். சமூக வலைதளங்களில் பேட்டியளித்து வரும் ஷர்மிகா, நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும், மாட்டுக்கறி சாப்பிட்டால் புற்றுநோய் வரும், நல்லவர்களுக்கு மட்டுமே குழந்தை பிறக்கும் உள்ளிட்ட பல கருத்துக்களை கூறி வந்தார். இந்த கருத்துக்கள் அறிவியலுக்கு முரணாக இருப்பதாக பலரும் புகார் அளித்த நிலையில், அவர் மீது சித்த மருத்துவர் கல்லூரி நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது.