மருமகன் பலியான அதிர்ச்சியில் மாமனார் பலி! – கோர விபத்தால் நேர்ந்த பரிதாபம்…

April 8, 2022 at 3:22 pm
pc

கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் மாடூர் சுங்கச் சாவடியில் இருந்து எமப்பேர் நோக்கி பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் மற்றும் சண்முகம் ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது கள்ளக்குறிச்சி புறவழி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது எதிர்திசையில் திருக்கோவிலூர் அடுத்த துறிஞ்சிபட்டை கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஜெயபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்த சண்முகம் ரஞ்சித் ராஜ் குமார் ஆகிய மூவரும் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சேலம் அழைத்துச் செல்லும் வழியில் சண்முகம் உயிரிழந்துவிட்டார். 

இதுகுறித்து சண்முகத்தின் மாமனார் சுப்ரமணியிடம் தெரிவிக்கப்பட்டது. சாலை விபத்தில் தனது மருமகன் உயிரிழந்ததை கேட்ட சுப்பிரமணி அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

சாலை விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் மருமகன் உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சியில் மாமனாரும் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website