மாணவர்களே உஷாரா படிங்க..! 5, 8-ம் வகுப்பில் மாணவர்களை பெயில் ஆக்கலாம் – கல்வித்துறை அறிவிப்பு
ஆண்டு இறுதி தேர்வு கல்வி உரிமை சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்க முடியாது. தற்போது அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மராட்டிய அரசு 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு முறையை மீண்டும் அமல்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாநில பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெயில் ஆக்கலாம் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு 2 மாதத்தில் மறுதேர்வு வைக்க வேண்டும். அதிலும் தோல்வி அடையும் மாணவர்களை அதே வகுப்பில் மீண்டும் படிக்க வைக்கலாம். அதே நேரத்தில் எந்த ஒரு மாணவரையும் தொடக்க கல்வி முடிக்கும் வரை பள்ளியில் இருந்து நீக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையே 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாது என்பதை கல்விதுறை தெளிவுபடுத்தி உள்ளது.