மாணவியை நிர்வாணமாக்கிய ஆசிரியர்… நடந்த விபரீதம்!

October 15, 2022 at 3:15 pm
pc

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பள்ளி தேர்வறைக்கு மாணவி ஒருவர் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் நீ பிட்டு வைத்திருக்கிறாய், எங்கு மறைத்து வைத்துள்ளாய் என கேட்டுள்ளார். மாணவி ஆடைக்குள் வைத்து பிட்டு பேப்பர் எடுத்து வரவில்லை என கண்ணீர் விட்டு கூறியுள்ளார். ஆனால், அந்த ஆசிரியர் அம்மாணவியை தனியாக ஒரு அழைத்து சென்று சீருடைகளை களைந்து நிர்வாணமாக்கியுள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி பள்ளியில் இருந்து வந்த சிறிது நேரத்திலேயே, வீட்டில் தீக்குளித்தார். அலறல் சத்தம் கேட்டு பதறி போன அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் மாணவியிடம் வாக்குமூலம் பெற்று, ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website