மாணவி பலாத்காரம்.. கர்ப்பத்தை கலைத்து டாக்டர் அட்டூழியம்!
சேலத்தில் மருத்துவ கல்லூரி மாணவியிடம் சமூகவலைதளம் மூலம் பழகி பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைப்பு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அழகாபுர சேர்ந்த மருத்துவ மாணவி தனியார் சித்தா மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அந்த இளம் பெண்ணிடம் சமூகவலைதளம் மூலம் பழகிய திருவண்ணாமலையை சேர்ந்த மருத்துவர் தமிழ்செல்வன் என்பவர் ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பமானதை கட்டாயப்படுத்தி கலைத்ததாக அப்பெண் புகாரளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.