மாதக்கணக்கில் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் !!தப்பிய பெண் காவல்துறையிடம் புகார்!

June 15, 2022 at 6:59 am
pc

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒற்றை மாதத்திற்கும் மேலாக தன்னை அடைத்து வைத்து சித்தரவதை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பீட்டர் மெகுவேர்(59) என்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் காவல்துறைக்கு அளித்துள்ள புகாரில், பீட்டர் மெகுவேர்(59) என்ற ஆண் ஒருவர் மாதக்கணக்கில் தன்னை அடைத்து வைத்து உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான சித்தரவதைகளை செய்ததாக வியாழன் மாலை சினோ ஹில்ஸ் பொலிசாருக்கு போன் செய்து புகார் அளித்துள்ளார்.

 மேலும் பாதிக்கப்பட்ட பெண் பீட்டர் மெகுவேர் தனது விருப்பத்திற்கு எதிராக பல மாதங்களாக தனது இல்லத்தில் தன்னை வைத்திருந்ததாகவும் பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பாக பொலிசார் அளித்த தகவலில், பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சோதனை செய்ததில், பெண்ணின் உடம்பில் புகாரில் தெரிவிக்கப்பட்டது தொடர்பான காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பீட்டர் மெகுவேரை பொலிஸார் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவர் கலிபோர்னியாவின் அண்டை மாகாணமான பிளாசென்டியாவில் இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது. ஆனால் பீட்டர் மெகுவேரே காலை 8:30 மணியளவில் அதிகாரிகளிடம் சரணடைந்த நிலையில், அவர் ஜாமீன் இல்லாமல் வகையில், மேற்கு பள்ளத்தாக்கு தடுப்பு மையத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் மீது கடத்தல், சித்திரவதை, கலவரம், கற்பழிப்பு, பொய்யான சிறைத்தண்டனை மற்றும் கொடிய ஆயுதத்தால் தாக்கியது போன்ற பல பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website