மாதவிடாய் வலியால் கஷ்டபடுறீங்களா? இத ட்ரை பண்ணி பாருங்க……!!

June 13, 2022 at 8:14 am
pc

அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று. ஆனால், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெண்களும் மாதவிடாய் வலியால் அவதிப்படுகின்றனர். இதற்காக பலர் பீரியட்ஸ் நேரத்தில் வலியை கட்டுப்படுத்த மாத்திரையையும் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், மிகவும் தவறான ஒரு விஷயம். ஒரு சிலருக்கு முதல் நாள் இருக்கும் வலி மறுநாள் நீடிப்பதில்லை. ஆனால், பல பெண்களுக்கு மூன்று நாட்களுமே இருக்கும்.

அந்த மாதிரியான நேரத்தில் எப்படி படுக்க உறங்க வேண்டும் என்பதை தான் இந்த பதிவின்மூலம் தெரிந்துக் கொள்ளபோகிறோம். கட்டாயம் ஒவ்வொரு பெண்களும் இதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மாதவிடாய் காலங்களில் முக்கியமாக பெண்கள் அழக்கூடாது. ஏனெனில், அழுவதால் வயிறு வலி அதிகரிக்க வாய்ப்புகள் உண்டும். மேலும், இந்த மாதிரியான நேரத்தில் வரும் கடுமையான இடுப்பு வலி மற்றும் வயிற்று வலி குறைவதற்கு படுக்கும் போது உங்களுடைய இரண்டு கால்களையும் சுவற்றின் மீது தூக்கி வைத்து படுங்க. அதாவது நேராக வானத்தை பார்த்தபடி படுத்துக் கொண்டு தலைக்கு தலையணையை வைத்துக் கொள்ளுங்கள்

பின்னர் கால்கலை தூக்கி சுவற்றின் மீது வைத்துக் கொள்ளுங்கள். இப்படி பத்து நிமிடம் படுத்தால் போதுமானது. இவ்வாறு படுப்பதால் வயிற்றில் ஏற்படக் கூடிய அழுத்தம் குறைந்து இடுப்பு வலி மற்றும் வயிறு வலி விரைவில் குறைந்து விடும். அதேபோல், இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இதை செய்தால் நன்றாக தூக்கம் வரும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website