மின்சாரம் தாக்கி பலியான மகன்… சிலை வைத்த பெற்றோர்!

April 19, 2023 at 5:32 pm
pc

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் ஷங்கர் தாண்டவை சேர்ந்தவர் புக்யா பிகோஜி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மகன் சித்து (வயது 7). ஒரே மகன் என்பதால் அவரது பெற்றோர் மிகுந்த அக்கறையுடனும் பாசத்துடனும் வளர்த்து வந்தனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். மகன் இறந்தது முதல் துக்கம் தாங்காமல் அவரது பெற்றோர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். 

இந்த நிலையில் தங்களது அன்பு மகனுக்கு சிலை வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து சிலை செய்பவரிடம் சென்று தனது மகனின் போட்டோவை கொடுத்து அதேபோல் சுமார் 5 அடி உயரத்தில் மெழுகு சிலையை தயார் செய்தனர். 

தயார் செய்யப்பட்ட சித்துவின் சிலையை கொண்டு வந்து தங்களது நிலத்தில் சிறிய அளவில் மண்டபம் கட்டி பிரதிஷ்டை செய்தனர். தங்களது மகன் சிலைக்கு காலை, மாலை இருவேளையும் பூஜை செய்து வணங்கி வருகின்றனர்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website