மீண்டும் ஒரு கொடூரம் – ஓடும் பேருந்தில் டிரைவர் மற்றும் நடத்துனரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

June 9, 2022 at 8:58 am
pc

பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா பஸ் நிலையத்தில் சிறுமி ஒருவர் பாட்னா செல்ல நின்று உள்ளார். பாட்னாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி கண்டக்டரும், டிரைவர் ஒருவரும் அவரை பஸ்சில் ஏற்றி உள்ளனர்.பின்னர் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளனர். இதில் சிறுமி மயக்கம் அடைந்து உள்ளார்.

பைபாஸ் சாலையில் பஸ் செல்லும் போது ஓடும் பஸ்சில் வைத்து டிரைவர், நடத்துனர் மேலும் ஒருவர் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். சிறுமியை அரை மயக்கத்தில் மீட்ட போலீசார் பஸ்சையும் பறிமுதல் செய்தனர். சிறுமியின் புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website