மீண்டும் களமிறங்கும் லட்சுமி மேனன்!
சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன். வெற்றிப்படமான இப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் கும்கி படமும் சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து ரெக்க, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த லட்சுமி மேனன் சிறிது காலம் வெளியில் தென்படாமல் இருந்தார். வாய்ப்பு குறைந்ததே இதற்கு காரணமாக இருந்தது.
இதனால், படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் நடிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறிவந்தார். இந்நிலையில் அவர், இப்போது நடிப்பில் முழுகவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘மலை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ‘அறம்’ நயன்தாரா அளவுக்கு தனக்கு பெயர் வாங்கித்தரும் என்று தனது நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லி மகிழ்ச்சி அடைந்து வருகிறார்.