முகத்தில் உள்ள பருக்கள் சுருக்கங்கள் மறைய மாம்பழம் செய்யும் அற்புதம்!! இனி கவலை வேண்டாம்
முக அழகை மேம்படுத்தவும், பராமரிக்கவும் ஒரு சில முக்கிய பழங்கள் உதவும். அதில் இந்த மாம்பழம் முக்கிய இடத்தில் உள்ளது.
மாம்பழத்தில் உள்ள சத்துக்களே முக அழகை பாதுகாக்கிறது. இதில் புரதசத்து வைட்டமின் எ ,வைட்டமின் பி6,ஃபோலேட் ,வைட்டமின் சி ,நார்சத்து ,நீர்சத்து போன்றவை அடங்கியுள்ளது.
அந்தவகையில் இதனை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
- முகத்தை வெண்மையாக மாற்ற முதலில் மாம்பழத்தை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அதன் சாற்றை யோகர்டுடன் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இவற்றுடன் முல்தானி மட்டியை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகம் வெண்மையாக மாறும்.
- மாம்பழ சாற்றை தேனுடன் நன்கு கலந்து கொண்டு பிறகு இதனை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். மேலும், முகம் பார்ப்பதற்கு மென்மையாகவும் எருக்கம்.
- முதலில் முட்டையை உடைத்து, அதன் வெள்ளை கருவை தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு அடித்து கொண்டு, அவற்றுடன் மாம்பழ சாற்றையும் சேர்க்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்து, வறண்ட பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் சுருக்கங்கள்.
- முதலில் மாம்பழ சாறுடன் தேனை நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றை கோதுமை மாவில் சேர்த்து கலந்து கொண்டு, முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் மினுமினு வென மின்னுமாம். மேலும், சருமத்தின் பொலிவும் அதிகரிக்கும்.