முகத்தில் உள்ள பரு,மங்கு,கரும்புள்ளி நீங்கி தங்கம் போல் மின்னிட எளிமையான அழகு குறிப்பு :.
தேவையான மூலப்பொருட்கள்
1.முல்தானிமட்டி பொடி – 1 ஸ்பூன் அளவு
2.பூலங்கிழங்கு பொடி – 1 ஸ்பூன் அளவு
3.வெட்டிவேர் பொடி- 1 ஸ்பூன் அளவு
4.குப்பைமேனி பொடி – 1 ஸ்பூன் அளவு
5.கருப்பு நன்னாரி வேர் பொடி – 1 ஸ்பூன் அளவு
6.அதிமதுரம் பொடி – 1 ஸ்பூன் அளவு
7.சிகப்பு சந்தனம் பொடி – 1 ஸ்பூன் அளவு
செய்முறை விளக்கம்
மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் பொடியாக கிடைக்கும் இதனை வாங்கி கொள்ளுங்கள்
கூறிய அளவுகளை சரிசமமாக எடுத்து கொள்ளுங்கள்
அதற்கு தேவையான அளவு ரோஸ் வாட்டர் அல்லது தயிர் கலந்து கொள்ளுங்கள்
ஒரு வகை பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள்
பயன்படுத்தும் முறை:
காலை வேலை மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டும்…குளிப்பதற்கு 30நிமிடம் முன்பு முகத்தில் தடவி நன்கு காய வையுங்கள்30 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவி விடவும்இதை வாரம் ஒரு முறை அல்லது 2 வாரத்திற்கு ஒரு முறை தான் பயன்படுத்த வேண்டும்…அடிக்கடி கூடாது
மருத்துவ நன்மைகள்:
இது முற்றிலும் இயற்கையானது இது பயன்படுத்தும் பொழுது முகத்தில் உள்ள அழுகை நீக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது இதனால் முகம் பொலிவு பெறும்மரு, மங்கு,கரும்புள்ளி,கருவளையம் ஆகியவை நீங்கும்
முக்கியமாக வயதுக்கு வந்த காலத்திலே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் அனைத்து முக பிரச்சனைக்கும் இது நல்ல தீர்வு