முடிஞ்சா பாரு – ஆளுங்கட்சிக்கு சவால் விட்ட சீமான்!

June 3, 2022 at 4:35 am
pc

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட தயாரா என சீமான் சவால் விட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பந்தப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

இதே போல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட மதிமுகவினரும் ஆஜரானார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், மதிமுகவிற்கும் எங்களுக்கும் எந்த பகையும் இல்லை. அண்ணன் வைகோவிற்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

சென்னையில் 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளது. இதற்கு எல்லாம் குண்டாஸ் இல்லையா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதை நாம் எப்படி ஏற்பது என்றதோடு, திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமை மூட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது என்கின்றனர். அப்படியானால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? மரத்தின் நிழலில் வளரும் குட்டை செடி தான் பாஜக என கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website