முடியவே முடியாது என்றேன்… அவர்தான் கட்டாயப்படுத்தினார்… சீக்ரெட்டை போட்டுடைத்த ஆண்ட்ரியா!
தான் முடியாது என்று கூறிய போதும் அந்த பிரபலம்தான் தன்னை கட்டாயப்படுத்தினார் என நடிகை ஆண்ட்ரியா போட்டுடைத்துள்ளார்.
தான் முடியாது என்று வெளியில் சென்றபோதும் அவர்தான் தன்னை கட்டாயப்படுத்தி அந்த காரியத்தை செய்ய வைத்தார் என பிரபலம் குறித்த ரகசியத்தை போட்டுடைத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா, முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வருகிறார். வெளிநாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் ஆண்ட்ரியா
பிசாசு 2
தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. படத்தில் சுமார் 10 நிமிட காட்சிகளில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது குரலில் வெளியான ஊ சொல்றியா பாடல் குறித்து பேசியுள்ளார்.
முடியாது என்றேன்
இந்நிலையில் ஊ சொல்றியா பாடலுக்காக JFW விருது பெற்றுள்ள ஆண்ட்ரியா அதுகுறித்து பேசியுள்ளார். அப்போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிராசத் தனது நீண்ட கால நண்பர் என்று கூறிய ஆண்ட்ரியா, தன்னை இந்த பாடலை பாடுமாறு கூறியதால் ஒரு ஸ்டான்ஸா பாடினேன். ஆனால் எனக்கு திருப்தியாக இல்லை. ஆகையால் பாட முடியாது என்று கூறி டிஸ்கஷன் ரூமுக்கு சென்று விட்டேன்.
கட்டாயப்படுத்தினார்
ஆனால் டிஎஸ்பி என்னை விடவில்லை. ரொம்பவே கட்டாயப்படுத்தினார். உன்னால் முடியும் பாடு என ஊக்கப்படுத்தினார். அதன்பிறகு தான் நான் பாடினேன். ஊ சொல்றியா பாடல் இந்த அளவுக்கு ஹிட்டானதற்கு காரணம் டிஎஸ்பிதான். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார் ஆண்ட்ரியா.